top of page

சடையன்குளம் - Sadaiyankulam

Price

₹490.00

தொடிச்சியின் திருமண நாளில் கலவரம் தொடங்குகிறது. கல்யாணக் கோலாகலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் குலைக்கப்படுகின்றன. இதற்கான காரணமோ மிகமிகச் சிறிது. இந்தப் பகைமை கிராமத்து மக்களின் வாழ்வியலைக் கருவறுக்க முனைகிறது. மணப்பெண்ணாகும் நாளில் தன் கண்முன்னே நிகழ்ந்த கலவரங்களை எதிர்கொண்ட தொடிச்சி, பின்னர் படிப்படியாகக் கிராமத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியாகவும், நிலைமைகளைத் துணிவுடன் எதிர்கொள்ளும் பெண்ணாகவும் எழுகிறார்.

ஸ்ரீதரகணேசனின் இந்த நாவல், தலித்துகள் தம் வாழ்வை அமைதியாகவும் சுயமரியாதையோடும் நடத்திச்செல்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபட வகையின்றித் தவிக்க வேண்டியதன் காரணமென்ன என்னும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. ஆதிக்கச் சக்திகளின் விருப்பங்களுக்குட்பட்டுச் செயல்படாவிட்டால் மீட்சியில்லை என்கிற நிலையில் சிக்கிக்கொண்ட தலித் உடல்களின் இயக்கத்தை விவரிக்கிறது.

Quantity

bottom of page